காதலியை கரம்பிடிக்க கணவனுக்கு 71 ஆடுகளை இழப்பீடாக கொடுத்த காதலன்…!!!
இந்தியாவில் கோரக்பூர் பகுதியில் உள்ள இளைஞர்கள் இருவரின் பிரச்சினையை தீர்ப்பதற்காக 71 ஆடுகளை இழப்பீடாக வழங்க கிராம சபை உத்தரவிட்டுள்ளது.
திருமணமான இளம்பெண் காதலனுடன் சென்றதும் இந்த பிரச்சினை தொடங்கியுள்ளது. பின்னர் இவர்கள் இருவரையும் கணவரின் குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும், கணவருடன் வாழ எனக்கு விருப்பம் இல்லை என்று அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கணவர் மற்றும் காதலனுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
குறித்த இளம் பெண் காதலனுடன் செல்லலாம் எனவும், ஆனால் அதற்கு முன்னர் கணவருக்கு 71 ஆடுகள் இழப்பீடாக கொடுக்க வேண்டும் எனவும் கிராம சபை உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து 71 ஆட்டிற்காக கட்டிய மனைவியை காதலனுக்கு விட்டுக்கொடுக்க கணவர் ஒத்துக்கொண்டார்.
இந்த முடிவுக்கு இணங்கி காதலன் அவருக்கு 71 ஆடுகளை வழங்கியுள்ளார். பின்னர் காதலன் காதலியை கரம்பிடித்துள்ளார். ஆனால் காதலன் தமது காதலியை திரும்ப பெற அளித்த ஆடுகள் அனைத்தும் குடும்ப சொத்து எனவும், அதில் தமது கருத்தினை அவர் கேட்கவில்லை என்றும் அவரது தந்தை தற்போது பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் தமது மகன், குடும்ப சொத்தில் இருந்து 71 ஆடுகளை திருடிவிட்டார் எனவும், அந்த ஆடுகளை மீட்டுத் தரவேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.