உல்லாசத்திற்கு தடையாக இருந்த பச்சிளங்குழந்தையை ஈன இரக்கம் இன்றி அடித்துக் கொன்ற தந்தை…!! இந்தியாவில் நாளுக்கு நாள் அரங்கேறும் கொடூரம்..!!!
உல்லாசத்திற்கு தடையாக இருந்த பச்சிளங்குழந்தையை ஈன இரக்கம் இன்றி மதுபோதையில் அடித்துக் கொன்ற கொடூர தந்தையின் செயல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சென்னையை சேர்ந்த 25 வயதுடைய துர்கா என்பவருக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகனும், மகளும் பிறந்துள்ளார். அந்த நிலையில் துர்காவின் கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் 27 வயதுடைய எல்லப்பன் என்ற இளைஞனை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன் தம்பதியினருக்கு ராஜமாதா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பச்சிளங்குழந்தையான ராஜமாதா, நேற்று காலை மூக்கில் இருந்து இரத்தம் வழிந்த படியே இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த துர்கா பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். அதில், நேற்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த எல்லப்பன், துர்காவுடம் உல்லாசமாக இருந்துள்ளார்.
அந்த வேளையில் குழந்தை அடிக்கடி அழுது கொண்டே இருந்ததால், கோபம் அடைந்த எல்லப்பன் திடீரென குழந்தையின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். மேலும் துர்காவையும் பலமாக அடித்துள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், எல்லப்பனை கைது செய்த நிலையில் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்துள்ளனர்.