பாபர் மசூதி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒன்றிணைந்து ஒரே தீர்ப்பு..!!! சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம்..!! உயர் நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..!!
நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி வழக்கில் இன்று இந்திய உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு இன்று வளப்படுகின்றது. அதற்கான அறிவிப்பை உயர் நீதிமன்றம் நேற்று வெளியிட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுக்காப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் இன்று காலை குறித்த நீதிமன்றத்திற்கு வந்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் வந்த ஏனைய 4 நீபதிகளும் ஒன்றிணைந்து 5 நீதிபதிகளும் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். இன்று காலை 10: 30 மணிக்கு சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியுள்ளது.
அயோத்தி வழக்கில் சர்ச்சை நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகராத்தில் சுப்ரீம் கோர் இன்று இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளார். ஷியா வாரியம் மற்றும் வக்பு சன்னி அமைப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம் என்றும், ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பானது ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுக்கும் முறையில் அமைய கூடாது. வரலாறு, மதம் போன்றவற்றுக்கு கடந்தவையாகும். இந்த வழக்கு. மதசார்பின்மையே அரசியலமைப்பின் அடிப்படை பண்பு. பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் உருவாக்கப்பட்டது என்று நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதே வேளையில் பாபர் மசூதி எப்போது உருவாக்கப்பட்டது என்பதற்கு எந்தவொரு சரியான ஆதாரமும் இல்லை.
உயர் நீதிமன்றம் இரு பக்கமும் சார்பாக நடுநிலை காக்கும் நிலையிலுள்ளது. அயோத்தி வழக்கில் நடுநிலை காக்கப்படும். நாட்டின் அமைதியை காக்கும் வகையில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய நில உரிமை கோரி கோரிய ஷியா அமைப்பின் மனுவில் ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது. அந்த இடத்தில் முன்பே கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கொடுத்த ஆதாரங்கள் ஆராயப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்திய தொல்லியல் துறை 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் அங்கு இருந்ததாக கூறியுள்ளது. 28 வருடங்களாக சர்ச்சைக்குரிய உருவாக்கிய நிலத்தில் என்ன இருந்தது என்று கூறுவதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்ற வகையில் இந்த நிலம் இந்துக்களுக்கு தான் உரியது. சர்ச்சையை ஏற்படுத்தும் இந்த நிலம் அரசுக்கு தான் சொந்தம். இருப்பினும் மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதனால் மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறை கட்டிடம் அல்ல. சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் 3 மாதங்களில் கோயில் கட்ட மத்திய அரசு டிரஸ்ட் அமைக்க வேண்டும். அயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படும். அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.