நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்த காதலனுடன் சேர்ந்து மணப்பெண் செய்த செயல்…!!! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர..!!
இந்தியாவில் சென்னை மாவட்டம் அயனாவரத்தைச் சேர்ந்த ரேகா என்ற இளம் பெண்ணுக்கும் அதே இடத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. தங்களது காதல் கதையை ரேகா அவரது பெற்றோரிடம் எடுத்து கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் ரேகாவின் பெற்றோர் காதலை ஏற்க மறுத்துள்ளனர்.மக்களின் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைத்த ரேகாவின் பெற்றோர் மக்கள் ரேகாவிற்கு விருப்பம் இல்லாமல் அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்துள்ளனர். வேறொரு நபருடன் ரேகாவிற்கு திருமணம் நிச்சயம் நடத்தப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காதலனிடம் கூறிய ரேகா, என்ன செய்வீயோ, இல்லையோ எனக்கு தெரியாது எப்படியாவாது இந்த கலியாணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் படி திட்டம் தீட்டி, காதலிக்கும் போது காதல் ஜோடி ஒன்றாக எடுத்த போட்டோவை கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிளைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். பின்னர் ரேகாவின் காதலன், தனது நம்பரில் இருந்து அனுப்பியுள்ளார்.
அந்த போட்டோவை கண்டு அதிர்ச்சி அடைந்த மாப்பிளை உடனே பெற்றோரிடம் காட்டி கூறியுள்ளார். மாப்பிளை வீட்டுக்காரர் ரேகாவின் குடும்பத்தினரிடம் இந்த விஷயம் தொடர்பாக தெரிவித்து கல்யாணத்தை நிறுத்தியுள்ளனர். அதையடுத்து மணமகனுக்கு வேறொரு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து யார் இந்த காதல் ஜோடி போட்டோவை மாப்பிளை வீட்டிற்கு அனுப்பியிருப்பார்கள் என்று கண்டுபிடிப்பதற்காக பெண்ணின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி போட்டோவை வந்த எண்ணை பொலிஸார் ஆய்வு செய்தனர்.
விசாரணையில் அந்த போட்டோவை ரேகாவின் காதலன் தான் அனுப்பி வைத்து என தெரிய வந்துள்ளது. இருவரும் ஒன்றிணைந்து திருமணத்தை நிறுத்துவதற்காக திட்டம் தீட்டி செயல்பட்டதையும் பொலிஸார் கண்டு பிடித்தனர். அதையடுத்து ரேகாவையும், அவரது காதலனையும் அழைத்து பொலிஸார் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.