வளி மாசடைவு காரணமாக பாடசாலைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!!!
வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாக்கத்தாலும் மனிதர்களின் அன்றாட செயல்களால் சுற்றுச்சுழல் மாசடைந்து வருகின்றது. வாயுக்களின் இந்த சமச்சீர்நிலை மாறாமல் இருக்கும் வரையில் வளி மண்டலம் எந்தவித பாதிப்பும் அடையாது. தொழில் மயமாதல், நவீனமயமாதல் முதலியவற்றால் வளி மண்டலமானது பாதிப்படைகிறது. இதனால் காற்று மாசடைந்து வருகின்றது.
காற்று மாசடைவு தன்மை அதிகரிப்பதன் காரணமாக புதுடில்லியிலுள்ள பாடசாலைகளுக்கு 2 தினங்கள் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. புதுடில்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசடைவு அதிகரித்து வரும் நிலையில், இந்திய உச்ச நீதிமன்றமும் காற்று மாசு தொடர்பாக பல கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் இது போன்ற நிலையில் காற்று மாசடைவு குறைவடையாத சூழலில் நேற்றைய தினம் தொடக்கம் இரண்டு தினங்களுக்கு புதுடில்லியில் இருக்கும் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சபை கூறியுள்ளது.
காற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் புதுடில்லி உட்பட ஏனைய சில இடங்களில் புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள், கல்குவாரிகள் உள்ளிட்டவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மூடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.