சென்னை மர்ம காய்ச்சலால் பெண் ஒருவர் உயிரிழப்பு..!! இந்தியாவில் தொடரும் சோகம்..!!
இந்தியா சென்னையில் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மதன் என்பவரின் மனைவி 40 வயதுடைய அமுதரசி என்ற தம்பதியினரும் எட்டியம்மன் நகரில் வாழ்ந்து வந்தனர். கடந்த சில தினங்களாக அமுதரசி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார்.
குறித்த பெண் காய்ச்சல் காரணமாக திருமுல்லைவாயில் உள்ள மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக மதன் அழைத்துச் சென்றுள்ளார். இருப்பினும் அந்த பெண்ணிற்கு காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது.
அதன் காரணமாக போரூரில்உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அமுதரசி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வைத்தியர்கள் சிகிச்சை வழங்கி வந்தனர். மேலும் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அமுதரசி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் அமுதாவின் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீரில் நுளம்புகள் பெருகி டெங்கு, வைரஸ் போன்ற காய்ச்சல்கள் தீவிரமாக பரவி வருகின்றது. அரசு சார்பாக தமிழகம் முழுவதும் சுகாதார பணிகள் முன்முரமாக இடம்பெற்று வருகின்றது. பொதுமக்களும் தாங்கள் இருக்கும் இடங்களில் தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.