ஆற்றில் தத்தளித்த தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் வெள்ளத்தில் மூழ்கி பலி..!!! மதுரையில் நடந்த சோகம்..!!!
ஆற்றுக்குள் தத்தளித்த கூடப்பிறந்த தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கு 10 வயதுடைய பாலமுருகன் மற்றும் ஆகாஷ் என்ற இரு மகன்கள் உள்ளன. இவர்கள் உருவம் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் பள்ளி விடுமுறை நாள் என்பதால் நண்பர்களுடன் பாலமுருகன் மற்றும் ஆகாஷும் விளையாட சென்ற நிலையில் ஆரப்பாளையம் பகுதியிலுள்ள வைகை ஆற்றில் அனைவரும் குளிக்க சென்றனர்.
விவசாயத்திற்காக வைகை ஆற்று அணையில் அண்மையில் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் நீர் கரைபுரண்டு அதிகமாக ஓடுகின்றது. வெள்ளப்பெருக்கு காரணமாக மதுரை கல் பாலம் வழியாக வாகனங்கள் பயணிப்பதற்கு முன்பே தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் ஆகாஷ் நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தான். அதைக் கண்ட அண்ணன் பாலமுருகன் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக ஆற்றுக்குள் குதித்து தம்பியை காப்பற்ற முயன்றன்.
அதேபோல் ஆகாஷை பத்திரமாக வெளியேற்றிய பாலமுருகன் எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டான். அண்ணன் வெள்ளத்தில் மூழ்குவதை கண்டு ஆகாஷ் கதறி அழுதான். அங்கு நின்ற அனைவரும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாலமுருகனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் பாலமுருகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.