திருமணமான மறுநாளே மாரடைப்பால் பலியான புதுப்பெண்..!!!! சோகத்தில் உறைந்த குடும்பத்தினர்..!!!
கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆந்திர மாநிலத்தின் கருடாகண்டி கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் சுரேஷ் என்ற இளைஞனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தமயந்தி என்ற இளம்பெண்ணுக்கும் கோலாகலமாக மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது. மறுநாள் (29) திருமண மண்டபத்திலிருந்து பல கனவுகளோடு கணவனின் வீட்டிற்கு செல்ல மகிழ்ச்சியாக தமயந்தி தயாரானார்.அந்த வேளையில் திடீரென தமயந்தி மயங்கி கீழே சுருண்டு விழுந்தார்.
அதைக் கண்ட புதுமாப்பிள்ளை என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவரும், அவரது குடும்பத்தினரும் ஒன்றிணைந்து தமயந்தியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தமயந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறினார்கள். மருத்துவர் கூறியதைக் கேட்டு அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்து நிலையில் கதறி அழுதுள்ளார். அதைத் தொடர்ந்து தமயந்தியின் உடலுக்கு அவர் கணவர் மற்றும் குடும்பத்தினர் கண்ணீருடன் இறுதிச்சடங்கு செய்துள்ளனர்.