குழந்தையின்மை பிரச்சினையால் சிகிச்சைக்கு சென்ற பெண்… உன் கணவரிடம் பிரச்சனை இருக்கிறது. அவரால் உனக்கு குழந்தையை கொடுக்க முடியாது என கூறி அத்துமீறிய மருத்துவர்….!!
சென்னையில் இயங்கி வருகின்ற பிரபல சித்த வைத்தியசாலை ஒன்றில் அண்ணாதுரை என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். சித்த மருத்துவத்தில் பிரபலம் அடைந்து காணப்பட்ட இவரிடம் ராஜேஷ் என்ற இளைஞன் மஞ்சள் காமாலைக்காக அவரிடம் சிகிச்சை பெற்று பூரணகுணம் பெற்றுள்ளார். அதனால அவரிடம் ஒரு நம்பிக்கை வந்துள்ளது. ராஜேஷ் தன் மனைவிக்கு குழந்தையின்மை பிரச்சினைக்காக குறித்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் இந்த நிலையில் அண்ணாதுறை ராஜேஷுக்கு நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்டு புதிய மருந்து ஒன்று வந்திருக்கின்றது. அதை உடனடியாக வந்து வாங்கிக் கொண்டு செல்லுங்கள் என்று கூறியிருந்த நிலையில் ராஜேஷ் நான் அலுவலகத்தில் இருக்கின்றேன் அதனால என்னுடைய மனைவியை அனுப்புகிறேன் என்று கூறினார். பின்னர் ராஜேஷ் தன் மனைவியை அங்கே அனுப்பி வைத்தார்.
அவரின் மனைவி மட்டும் தனியாக சென்ற பொழுது மருத்துவர் அண்ணாதுரை ராஜேஷின் மனைவியிடம், ‘உன் கணவரிடம் பிரச்சனை இருக்கிறது. அவரால் உனக்கு குழந்தையை கொடுக்க முடியாது.’ என்று கூறி அந்த பெண்ணிடம் அத்துமீறி உள்ளார்.
அதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பித்து ஓடி வெளியேறி, பின்னர் தன் கணவனிடம் இது தொடர்பாக தெரிவித்து இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அண்ணாதுரை மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் அண்ணாதுரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.