தகாத உறவு விவகாரத்தில் பெண் மீது அசிட் வீசிய இளைஞன்…! இந்தியாவில் நடந்த சோகம்…!!!
கணவனை இழந்த தனம் என்ற பெண் ஒருவர் இராசிபுரத்தை அடுத்த குருசாமிபாளையத்தை தனியாக வசித்து வந்தார். அந்த பெண் முன்னரே திருமணமாகி 3ஆவது மகளான விஜயா தருமபுரியை சேர்ந்த சாமுவேல் என்பவருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலையில் விஜயாவின் சகோதரி மகள் வசந்தி மீது சாமுவேல் ஆசைப்பட்டுள்ளார்.அதற்கு விஜயா எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சாமுவேல், வசந்தியை கடத்த தனத்தின் வீட்டிற்கு அசிட் மற்றும் கத்தியுடன் சென்றுள்ளார்.
அங்கு தனத்திற்கு சாமுவேலுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் தனத்தை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சாமுவேலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தனத்தின் மீது ஆசிட் ஊற்றி அவரை வெட்டி கொலை செய்த சாமுவேல் பொதுமக்கள் மீதும் அசிட் வீசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த மக்கள் சாமுவேலை பிடித்து தாக்கியுள்ளனர்.
அதில் படுகாயமடைந்த சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதையடுத்து தனம் மற்றும் சாமுவேல் ஆகியோரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் அசிட் பட்டு காயமடைந்த 10க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.