மலேசிய அரசாங்கம் விடுத்த திடீர் அறிவிப்பு..! மகிழ்ச்சியில் இந்தியர்கள்..!
மலேசியாவிற்கு 15 நாட்கள் விசா இல்லாமல் இந்திய சுற்றுலா பயணிகள் விஜயம் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மலேசிய அரசாங்கம் அந்நாட்டு அரசிதழில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது, அதில் மலேசியாவுக்கு வரும் இந்தியர்கள், இந்தியாவில் இருக்கும் மலேசிய தூதரகத்தில் தமது பெயரை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் அவ்வாறு பெயர் பதிவு செய்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் சுற்றுலா வரலாம் என்றும், சுற்றுலா வரும் போது மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல அல்லது வேறு நாட்டுக்கு செல்ல பயண டிக்கெட் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை இம்முறை அமலில் இருக்கும் என்றும், ஒருமுறை விஜயம் செய்வோர் 45 நாட்கள் கழிந்த பிறகு மலேசியாவுக்கு மீண்டும் வர முடியும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.