மகன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த போது இண்டெர்நெட்டை துண்டித்த தந்தை…!!! பின்னர் நடந்த கொடூர சம்பவம்..!!!
மகன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த போது தந்தை இண்டெர்நெட்டை துண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர்குமார் என்பவர் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி இவருக்கு ரகுவீர்குமார் என்ற மகன் உள்ளார். ரகுவீர்குமார் பப்ஞி என்ற மொபைலில் வீடியோ கேமிற்கு அடிமையாக இருந்துள்ளார். இதனை பலமுறை சங்கர் குமார் கண்டித்தும் அவர் கேட்கவில்லை.
சம்பவ தினம் அன்று, ரகூவீர் வழமை போல் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் சங்கர் குமார் மொபைல் போனை பறித்து, அதில் இண்டெர்நெட்டை துண்டித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த ரகுவீர்குமார் தனது குடும்பத்தில் உள்ளவர்களை வீட்டில் உள்ள அறையில் ஒன்றில் பூட்டி வைத்த நிலையில் தந்தை என்று கூட பாராமல் சங்கர்குமாரின் உடலை 3 பாகங்களாக அறுத்து கொலை செய்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சங்கர்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரகுவீர்குமார் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் என்பதால் பொலிஸார் நூதனமான முறையில் விசாரணையை மேற்கொண்ட வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவமானது பெலகாவி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.