மனைவி மற்றும் பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நபர்..!!
உத்திரபிரதேச மாநிலத்தின் வாரணாசி பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சேதன் துளசியன் – 42 வயதுடைய ரிது துல்சியன் என்ற தம்பதியினருக்கு 17 வயதுடைய ஹர்ஷ் என்ற மகனும், 15 வயதுடைய மகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்துள்ளார்.அவருடைய பெற்றோர் கீழ் தளத்தில் வசித்து வந்துள்ளனர். சேதன் துளசியன் வியாபாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு போன் செய்த சேதன், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டதாகவும், தற்போது தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொலிஸார் சேதனின் வீட்டிற்கு விரைந்து சென்று கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்த சேதன் துளசியனின் தந்தை, பொலிஸ் வந்திருப்பதை பார்த்து விட்டு என்ன நடக்கிறது என்பது புரியாமல் திகைத்து நின்றார். சேதன் தங்கியிருக்கும் அறையை பற்றி கேட்டறிந்த பொலிஸார், மேல் தளத்திற்கு சென்று பார்த்த போது, கதவு உள்தாழ்ப்பால் போடப்பட்டிருந்தது.
பொலிஸார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது சேதன் சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். அதற்கு அருகில் அவருடைய மனைவி இறந்த நிலையிலும், படுக்கையில் அவருடைய மகனும், மகளும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அதன் பின்னர் வீட்டில் அசம்பாவிதம் நடந்திருப்பது சேதனின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அதையடுத்து 04பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், இந்த தற்கொலை சம்பவத்திற்கான காரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.