கொரோனா வைரஸ் மத்தியில் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய விமானம்..!!
சீனாவில் கோர தாண்டவமாடும் கொடிய கொரோனா வைரஸ் மத்தியில் வுகான் நகரில் தவிர்த்து வரும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக மிகப்பெரிய விமானம் ஒன்று இன்றைய தினம் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சீனாவில் கொடிய உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000க்கு மேலாக தூண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்தாகவும் 1,749 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் கவுகான் நகரிலிருந்த பல இந்தியர்களை அழைத்து வருவதற்காக மிகப்பெரிய விமானத்தை இந்திய மத்திய அரசு இன்றைய தினம் அனுப்பியுள்ளது.
சீனாவுக்கு பயணிக்கவுள்ள இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானத்தில் மருந்துகளும் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னரே மத்திய அரசு அனுப்பி வைத்த இரு விமானங்கள் மூலம் வுகானில் இருந்து 640 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 406 பேர் டெல்லியிலுள்ள இந்தோ–திபெத்திய எல்லை போலீஸ் படை முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டனர். மற்றவர்கள் அரியானா மாநிலத்திலுள்ள இராணுவ மையத்தில் தங்கவைக்கப்பட்டனர்.