தந்தையின் கவனக்குறைவால் துடி துடித்து உயிரிழந்த 18 மாத பெண் குழந்தை..!! இந்தியாவில் நடந்த சோகம்..!
இந்தியாவில் ஐதராபாத் சந்திரயங்குட்டாவின் பார்காஸ் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கலீத் சாரி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை எடுத்துள்ளார். அப்போது அவரின் 18 மாத பெண் குழந்தை ஹுடா, காரின் முன் சக்கரத்திற்கு அருகில் இருந்துள்ளார். அதைக் காணாத கலீத், காரை குழந்தை மீது ஏற்றி இறக்கியுள்ளார். குழந்தை மீது காரை ஏற்றியதை அறிந்த கலீத், உடனே குழந்தையை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக சந்திரயங்குட்டா பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனது கவனக்குறைவால் தனது குழந்தையை தானே கொன்று விட்டதால் குற்ற உணர்ச்சியுடன் கலீத் சாரி மிகுந்த மனவேதனையில் துடித்து வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.