மருந்தகத்திற்கு மருந்து வாங்க போன 2 சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நபர் கைது..!!
மதுரையில் செல்லூர் போஸ் தெருவில் சங்கர் என்பவர் மெடிக்கல் வைத்திருக்கின்றார். இவருடைய மெடிக்கலுக்கு நேற்று மாலையில் இரண்டு பள்ளி சிறுமிகள் மருந்து வாங்க வந்து சென்றுள்ளனர். அந்த இரு சிறுமிகள் மருந்தைக் கேட்டும் கொடுக்காமல் இழுத்தடித்து மற்றவர்களை அனுப்பி உள்ளார். அதைத் தொடர்ந்து அனைவரும் சென்று விட்ட பிறகு சங்கர் சிறுமிகளை உள்ளே அழைத்து தன்னுடைய ஆடைகளை அகற்றி அவர்களுக்கு முன் நின்று பாலியல் ரீதியாக அத்துமீறி செயற்பட்டார்.
அப்போது அந்த சிறுமிகள் அலறி சத்தமிட ஊசியை வைத்து குத்தி விடுவேன் என்றும், இது தொடர்பாக வெளியே கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இந்த பயத்திலேயே வீட்டிற்கு சென்ற சிறுமிகளின் முகத்தை கண்ட பெற்றோர்கள் பதறி அடித்து என்னவென்று விசாரிக்கையில், உண்மையை கண்டுபிடித்து இருக்கின்றனர். இது தொடர்பாக, பொலிஸ் நிலையத்தில் சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சங்கரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.