மண மேடையில் மருமகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மாமியார்…!! இதோ வைரலாகும் வீடியோ..!
திருமணத்தில் ஏற்பட்ட பதற்றத்தால் மண மேடையில் மாமியார் மருகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
குறித்த வீடியோவில் மண மேடையில் உறவினர்கள் சூழ மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் உள்ளனர். முறைப்படி மணமகள் மாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம். ஆனால், மாறாக இந்த திருமண நிகழ்வின் போது மருமகளிடமிருந்து பூ, வாழைப்பழம் பெற்றுக்கொண்ட மாமியார், திருமண பதற்றம் மற்றும் குழப்பம் காரணமாக மருமகள் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றது இருவரையும் சங்கடத்திற்குள்ளாக்கியது. இருப்பினும், இந்த நிகழ்வை கண்ட மண்டபத்திலிருந்த அனைவரும் சிரித்து மகிழந்தனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Due to marriage tension and confusion, mother-in-law gets the blessings of daughter-in-law by touching her feet. And both of them are terribly embarrassed! Watch this video! ??? #marriage #Embarrassment #humour pic.twitter.com/ZTg8G89Mg9
— Ananth Rupanagudi (@rananth) February 29, 2020