ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் பலி…!!!
இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோஹர்புர்வா பகுதியில் மின்னல் தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதனை அடுத்து 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், கடுமையாக பாதிக்கப்பட்ட 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேவேளை, மேலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த இடத்தில் பலத்த மழை பெய்து பல பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் பகுதியிலுள்ள ஏரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த படகில் 20 பேர் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கிய ஏனையோரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.