இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பிறந்த தினம்.!
1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் கல்பனா சாவ்லா என்பவர் பிறந்தார். இவருடைய பள்ளி சான்றிதழ்களில் 1961ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் திகதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் 1997ஆம் ஆண்டு கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்-87ல் ஆறு வீரர்கள் கொண்ட குழுவுடன் முதல் முறையாக விண்வெளிக்கு சென்றார். இந்த விண்கலம் விண்வெளியில் 372 நேரம் ஆராச்சியில் ஈடுபட்டு 252 தடவை பூமியை சுற்றி வந்தார்.
2003 ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107ல் கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு மீண்டும் சென்றனர். பிப்ரவரி 1ஆம் திகதி, பயணம் முடித்து விண்கலம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, விண்கலம் வெடித்துச் சிதறியது. அதில் கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். வானத்தை வசப்படுத்திய கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக கர்நாடக அரசும், இந்திய அரசும் சாதனை புரியும் பெண்களுக்கு இவரது பெயரில் விருது வழங்கி வருகிறது.