வாகனத்தில் நம்பர் பிளேட்டை தவிர Sticker-கள் இருந்தால் 5000 ரூபா அபராதம்…!!!
போக்குவரத்து விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் இந்தியா முழுவதும் செப்டம்பர் மாதம் 01ஆம் திகதி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி மது போதையில் வாகனம் ஓட்டுபவருக்கு 10,000 ரூபா அபராதமும், வேகமாக வாகனம் ஓட்டுபவருக்கும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுபவருக்கு 5,000 ரூபாவில் இருந்து 10,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் சீட் பெலிட் மற்றும் கெல்மட் போன்றவற்றை அணியாமல் வாகனம் ஓட்டுபவருக்கான அபராதம் 100 ரூபாவில் இருந்து 1000 ரூபாவாக அதிகரித்து காணப்படுகின்றது. இதே போன்று செல்போனில் பேசிய படி வாகனம் செலுத்தினால் கூட 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. சில இடங்களில் வசூல் செய்யப்படுகின்ற இந்த அபராதத் தொகை வாகனத்தின் மதிப்பை விட அதிகமாக வசூல் செய்யப்படுகின்ற காரணத்தால் வாகன ஓட்டுனர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் வாகனத்தை அங்கேயே விட்டு செல்லுகின்ற நிலைமையும் ஏற்படுகின்றது .
அண்மையில் டெல்லியில் ஒரு வாகன ஓட்டிக்கு அதிக அபராதம் விதித்த காரணத்திற்காக அவரது வாகனத்திற்கு தீ வைத்து எரித்துள்ளார். வட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 50,000 ரூபாவை விட அதிகமாக காணப்படுகின்றது. இவ்வளவு தொகை அபராதம் விதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாகனப் போக்குவரத்து விதிகளை மீறலுக்காக கடுமையா விதிக்கப்படும் அபராத தொகையை கண்டு வாகன ஓட்டுனர்கள் பயப்பட்டு வரும் நிலையில் மேலும் அவர்களை பயமுறுத்தும் விதமாக பொலிஸார் வேறு சில காரணங்களுக்காகவும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதோடு வாகனங்களில் ஜாதி, மதம் அரசியல் சார்ந்த அடையாளங்கள் கொண்ட Sticker-களை வாகனங்களின் நம்பர் பிளேட் உள்ள சில இடங்களில் ஒட்டி இருந்தால் அதற்கு அபராதமாக 5000 ரூபா வரை விதிக்கப்படும் என சிலர் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைத் சேர்ந்த சிலர் தான் அவர்களின் வாகனங்களில் ஜாதி, மதம் அரசியல் சார்ந்த அடையாளங்கள் கொண்ட Sticker-களை ஒட்டினதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் பொலிஸ் அதிகாரிகள் கூறிய போது பெயர், பதவி, கல்வி போன்ற Sticker-களுக்கு நாங்கள் அபராதம் விதிக்கவில்லை மாறாக Sticker கலாச்சாரத்தை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என கூறினார். நம்பர் பிளேட்டில வாகன பதிவு எண் மட்டும் தான் இருக்க வேண்டும். மாறாக வாகன பதிவு எண்னை சிறியதாக எழுதிவிட்டு கட்சிகள் பெயரையோ அல்லது அவர்கள் சார்ந்த அமைப்பிகள் பெயரையோ, இல்லா அவங்களுக்கு பிடிச்ச நடிகர்கள் பெயரையோ எழுதி வைச்சு இருகின்றார்கள் இது போக்குவரத்து விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.
ஜாதி, மதம் அரசியல் Sticker-கள் எல்லாம் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். அதனால் தான் வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பு கருதித்தான் அபராதம் விதிச்சு வருவதாக ராஜஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆனால் ஒரு சில மக்கள் இதுக்கெல்லாம் அபராதம் விதிப்பங்களா? என்ற கேள்வி எழுப்பினாலும், பொலிசாரின் இந்த செயல் சரிதான் என்று அதிகாரிகளும், சமூக தள வாசிகளும், ஒரு சில பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.