தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக பயந்து தற்கொலை செய்து கொண்ட நபர்..!!
சீனாவின் ஹவுன் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உக்கிரமடைந்து வருகின்றது. கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கில் 21 நாட்களுக்கு இந்திய முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். உயிரே முக்கியம் என்ற அடிப்படையில் ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டிருக்கும் நிலையில், சில இடங்களில் வீடுகளில் முடக்கப்பட்டிருப்பவர்கள் எதிர்மறையான விளைவுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தேனி மாவட்டத்தில் ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக்கிடந்த நபர் ஒருவர் நிர்வானமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து மூதாட்டி ஒருவரை கடித்து கொலை செய்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு இடையில் ஊரடங்கு சட்டம் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது கிடைக்காத விரக்தியில் கேரளாவில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் இந்த நிலையில், மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களுக்கு அடுத்த படியாக கொரோனா நோய் தொற்று நாட்டிலேயே 3வதாக உள்ள மாநிலமான கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திலுள்ள உப்பூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ன மடிவாலா என்ற 56 வயதுடைய ஒருவர் கடந்த புதன் கிழமையன்று தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.