கணவரை பிரிந்து 10 வருடமாக வேறு நபருடன் வாழ்ந்து வந்த மனைவி..! கொரோனா அச்சத்தில் சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு நேர்ந்த கதி..!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் செல்வி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 10 வருடத்திற்கு முன்னர் கணவரை பிரிந்து சென்ற செல்வி அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருடன் திருப்பூருக்கு சென்றார்.அங்கு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
முருகன் மற்றும் செல்வி என்ற புது தம்பதியினர் அங்கு உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். அதன் இடையில் கொரோனா வைரஸ் பரவல் பீதியால் அங்கு வேலை பார்த்த அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். அதையடுத்து சொந்த ஊருக்கு செல்வியும், முருகனும் வந்தனர். அப்போது இருவரையும் அவரது உறவினர்களான கதிரேசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தங்களின் கூட்டாளிகளுடன் சென்று அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியோடியுள்ளனர்.
அதில் செல்வி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் முருகன் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் செல்வி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.