கொடிய கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நோக்கில் தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு..!!
கொடிய கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நோக்கில் தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் உட்பட 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு 11,92 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அதை தடுப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு வேகமாக முனைந்துள்ளது. அந்த வகையில், மாநில அரசுகளுக்கு உதவ பேரிடர் அபாய மேலாண்மை நிதியின் கீழ் மத்திய அரசு இந்த நிதியை வழங்கியுள்ளது. இந்த நிதியானது கொரோனா வைரஸ் தடுப்பு மையங்களை அமைத்தல், கூடுதலாக ஆய்வகங்களை அமைத்தல், மருத்துவ உபகரணங்களை வாங்குதல், அரசு மருத்துவமனைகளின் வசதிகளை மேம்ம்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.