இந்தியாவில் கொரோனாவினால் 14 மாத குழந்தை பலி..!!
இந்தியாவில் கொரோனா வைரஸால் 14 மாத குழந்தை உயிரிழந்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி இந்தியாவின் குஜராத்தின் ராம் நகரில் 14 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. புலம்பெயர் தொழிலாளியின் இக்குழந்தைக்கு எந்த பயண விபரமும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டது.
மேலும் இந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனையின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குஜராத்தில் மட்டும் 175 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.