மனைவி உயிருடன் இருக்க கல்லூரி மாணவியை இரண்டாவது திருமணம் செய்த 44 வயது நபர்…!!!!
முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே கல்லூரி மாணவியை இரண்டாவது திருமணம் செய்த நபரை பொலிசார் கைது செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூரின் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சிவமணி என்பவர் பைனான்ஸ் கம்பனியில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமணமாகி 10 வயதுடைய மகன் ஒருவர் உள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சினேகா என்ற கல்லூரி மாணவியுடன் சிவமணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சினேகா காணாமல் போயுள்ளதாக சினேகாவின் தந்தை புகார் கொடுத்த நிலையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினார்.
சிவமணி சினேகாவைத் திருமணம் செய்து வேளாங்கண்ணியில் பகுதியில் தங்கியிருப்பதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிவமணியை கைது செய்த பொலிஸார் சிவமணி மற்றும் சினேகாவிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் .