இந்தியாவில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி உலகின் குள்ளமான பெண்…!!
இந்தியாவில் உலகின் குள்ளமான பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் .
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது வரை 11439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1306 பேர் பூரண நலன் பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது வரை 377 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக பல்வேறு வழி முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் நகரைச் சேர்ந்த 2 அடி 6 அங்குலம் உள்ள 26 வயதுடைய உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் ஒருவர் ஜ்யோதி ஆம்கே இந்திய பொலிஸாரின் உதவியுடன், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார். இவர் பொலிஸாரின் வாகனத்தின் மீது நின்று கொண்டு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளது.