வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து கொலை செய்த கொடூர கணவன்…!!!
திருமணமான 5 மாதத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து கொலை செய்த நிலையில் அவரின் உடலை கிணற்றில் தூக்கி வீசி நாடகமாடிய கணவனின் கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சென்றாயன் என்ற இளைஞனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வரலட்சுமி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடந்து அடுத்த மாதத்தில் இருந்தே சென்றாயன் மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். அதோடு அவர் இரவு வேளைகளில் தினமும் மது அருந்தி விட்டு சண்டையில் பிடித்து வந்தார். அதையடுத்து வரலட்சுமி தனது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கணவரின் செயல் குறித்து கூறி அழுது புலம்பினாள்.
அதனை தொடர்ந்து வரலட்சுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சென்றாயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரலட்சுமியை சேர்த்து வைத்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சென்றாயன் குடிபோதையில் மனைவியை அடித்து கொலை செய்த நிலையில் அவரின் உடலை கிணற்றில் தூக்கி வீசி விட்டு தற்கொலை நாடகம் ஆடினார்.
ஆனால் வரலட்சுமியின் உறவினர்களுக்கு சென்றாயன் மீது சந்தேகம் வந்த நிலையில் பொலிஸில் புகார் கொடுத்தனர். இதை அறிந்த சென்றாயன் தலைமறைவானார். அதை தொடர்ந்து பொலிஸார் கிணற்றில் இருந்த வரலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் தலைமறைவான சென்றாயனை தீவிரமாக தேடி வருகின்றனர்.