வேலைக்கு சேர்ந்த மறுநாளே 8வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த இளம்பெண்..!!!
வேலைக்கு சேர்ந்த மறுநாளே 8வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 24 வயதுடைய டானிடா ஜூலியஸ் என்ற இளம் பெண் ஒருவர் தனியார் ஐ.டி. கம்பனியில் நேற்றைக்கு முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
நேற்றைய தினம் வேலைக்கு சென்ற டானிடா காலை 10 மணி முதல் பணியில் இருந்ததாக கூறுகின்றனர். மாலை 6.45 மணியளவில் 8வது மாடிக்கு வேகமாக சென்ற அங்கிருந்து குதித்துள்ளார்.
மாடியில் இருந்த இரும்புக்கம்பியில் அவருடைய தலை மோதி இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்துள்ளார். அதையடுத்து இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், டானிடாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற ரீதியில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்