பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை ஈவு இரக்கம் இன்றி கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த கொடூர தந்தை..!!
இந்தியாவில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தவமணி – சித்திரா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இந்த தம்பதியினருக்கு நான்காவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் குறித்த பச்சிளம் பெண் குழந்தை திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து, குடும்பத்தினர் அக்குழந்தையின் இறுதிச்சடங்கினை முடித்துள்ளனர்.
அதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் தவமணி – சித்திரா தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது தவமணி மற்றும் தவமணியின் தாயார் பாண்டியம்மாள் இருவரும், “நாங்கள் தான் குழந்தையை கொன்று புதைத்தோம்” என்று உண்மையை கூறி பொலிஸார் மற்றும் சித்திராவை அதிர வைத்துள்ளனர்.
மேலும் து தொடர்பாக விசாரித்த போது, சித்ரா குழந்தையை தூங்க வைத்து விட்டு, வெளியில் மற்ற குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது கள்ளிப்பாலை வாயில் ஊற்றியதோடு, குழந்தையின் கால்களைப் பிடித்து தரையில் ஓங்கியும் அடித்துள்ளனர். அதில் பலத்தகாயம் ஏற்பட்டு உயிரிழந்த பச்சிளம் குழந்தையை உடல் நலம் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக கூறி மக்களை நம்ப வைத்துள்ளதாக கூறியுள்ளனர். அதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தவமணி மற்றும் பாண்டியம்மாள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இவரையும் கைது செய்த சோழவந்தான் பொலிஸார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தந்தையும் பாட்டியும் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.