பிச்சைக்காரியை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞன்..!! குவியும் வாழ்த்துக்கள்!
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் என்ற இளைஞன் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது முதலாளியின் உத்தரவின் பேரில் நடை பாதையில் வாழும் பிச்சைக்காரர்களுக்கு கொரோனா ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நேரத்தில் உணவு வழங்கி வந்தார். அப்போது சாலை ஓரத்தில் பிச்சை எடுத்து வந்த நீலம் என்ற பெண்ணை பார்த்துள்ளார் அனில். அவருக்கு உணவு வழங்கிய அனில் தினமும் அவருடன் பேசிய பழகிய நிலையில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.
அதைத் தொடர்ந்து, காதல் ஜோடி இருவரும் அண்மையில் திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பாக நீலம் தெரிவிக்கையில், என் தந்தை இறந்து விட்டதால் நான் என் அண்ணன், அண்ணியுடன் வசித்து வந்தேன். அப்போது என் தாய்க்கு பக்கவாதம் ஏற்பட்டது, இதனால் என்னையும், என் தாயையும் இருவரும் அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டனர். என் தாயை காப்பாற்ற வேறு வழி தெரியாமல் பிச்சை எடுக்க தொடங்கினேன். என்னுடையை நிலையை அனில் புரிந்து கொண்ட நிலையில் இருவரும் நட்பாகி, காதலர்களாகி தற்போது தம்பதிகள் ஆகிவிட்டோம் என கூறியுள்ளார்.
அனில் தெரிவிக்கையில், அவளுடைய தைரியம் எனக்கு பிடித்திருந்தது. வீட்டில் இருந்து துரத்தப்பட்டாலும் மனம் தளராமல் தன் தாயை கவனித்து கொண்டது என்னை ஈர்த்தது, அதனால் நான் காதலில் விழுந்துவிட்டேன் என கூறினான். அனில் மற்றும் நீலம் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில் பலரும் தம்பதியை வாழ்த்தியுள்ளதோடு, அனிலை பாராட்டி தள்ளியுள்ளனர்.