ஈவு இரக்கம் இன்றி பெற்ற மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை..!! இவனையெல்லாம் என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள்!
ஈவு இரக்கம் இன்றி பெற்ற மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், குறித்த சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து உடனடியாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டதில் சிறுமியின் தந்தை மகளிடம் தகாத உறவில் ஈடுபட்டு மகளை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. உடனடியாக சிறுமியிடம் புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான அனைத்து மகளிர் பொலிஸ் நிலைய பொலிஸார் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டமான குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து காம கொடூர தந்தையை கைது செய்துள்ளனர். குறித்த சிறுமி தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.