வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தீ வைத்து எரித்து கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்..!! இந்தியாவில் நடந்த சோகம்!
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஸ்ரீதர் என்ற இளைஞனுக்கும் 25 வயதுடைய பாரதி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளன. ஸ்ரீதர் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாரதி கடந்த 25 ஆம் திகதி கடுமையான தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதைத் தொடர்ந்து பாரதி தற்கொலை செய்து கொண்டதாக அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தெரிவித்தார். ஆனால் இது குறித்து பாரதி பெற்றோர் அதிர்ச்சி புகாரை வழங்கியுள்ளனர். அதில், திருமணத்தின் போது 200 கிராம் தங்கம், இருசக்கர வாகனத்தை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால் கூடுதல் வரதட்சணை வேண்டும் என பாரதியை ஸ்ரீதரும் அவர் குடும்பத்தாரும் கொடுமைப்படுத்தி வந்ததோடு எங்களை மிரட்டினார்கள்.
மேலும் பணம் தரவில்லை என்றால் நான் 2ஆவது திருமணம் செய்வேன் என ஸ்ரீதர் மிரட்டினார். அதனால் என் மகளை அவர்கள் தீ வைத்து எரித்து கொன்று விட்டு தற்கொலை என நாடகம் ஆடுகிறார்கள் என தெரிவித்துள்ளன. மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.