குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற மகள் கண் முன்னே கட்டிய மனைவியை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கணவன்..!! ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!
ஆந்திராவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற மகள் கண் முன்னே கட்டிய மனைவியை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கணவனை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தியாவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சுபாஷினி என்பவரின் 3வது கணவர் 30 வயதுடைய புதாபுக்கல சுவாமுலு வாழ்ந்து வந்தார். தம்பதியினர் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி இரவு இருவரும் போதையில் இருந்துள்ளனர். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுவாமுலு தன் மனைவியை அடித்ததில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். மயக்கத்தில் இருந்த அவரை கணவர் சுவாமுலு இரவோடு இரவாக குழி தோண்டி உயிருடன் மண்ணுக்குள் புதைத்துள்ளார். அதைக் கண்ட சுபாஷினியின் 7 வயதுடைய மகள் தனது தந்தை, தாயை உயிருடன் இருக்கும் போதே குழிதோண்டி புதைத்துவிட்டார் என்று பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சுபாஷினி சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், தலைமறைவாகிய சுவாமுலு மீது வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.