ஆன்லைனில் பாடத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 10 ஆம் வகுப்பு மாணவி!
ஆன்லைனில் பாடத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கேரளாவில் மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஸ்மார்ட்போன் மூலமும் பாடங்களை மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் கேரளாவிலுள்ள மலப்புரம் என்ற பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தங்கள் வீட்டில் இருந்த தொலைக்காட்சி பழுதடைந்து விட்டதால் ஆன்லைன் மூலம் பாட வகுப்புகளை பார்க்க முடிவு செய்தார். ஆனால் அவரது செல்போனில் சார்ஜ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட் போன் போன்றவற்றின் மூலம் பாடங்களை பார்க்க முடியாததால் மன வேதனை அடைந்த அவர் தன்னைத் தானே தீ இட்டு கொழுத்தி கொண்டுள்ளார்.
தீயினால் படுகாயம் அடைந்த மாணவியை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்து விட்டார்.