திருமணமான 7 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்..!!
திருமணமான 7 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்ணின் செயல் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கோவையைச் சேர்ந்த 31 வயதுடைய ஆரோக்கியராஜ் என்பவருக்கும், வெள்ளலூர் பட்டணம் ரோடு பகுதியை சேர்ந்த 27 வயதுடைய கிறிஸ்டினா என்ற பெண்ணுக்கும் கடந்த 27 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் கிறிஸ்டினா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அதைக் கண்டு அதிர்ந்து போன அக்கம், பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிறிஸ்டினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஒரே வாரத்தில் உயிரிழந்ததால் இது தற்கொலையா? இல்லை கொலையா?என்னும் ரீதியில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.