திருமணமான நாள் முதல் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்திய நிலையில் மனவேதனை அடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை!!
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கல்லு படேல் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ராமலல்லி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதலேயே கணவர், மாமியார், மைத்துனர் ஆகியோர் ராமலல்லியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். ராமலல்லி செய்யாத தவறை செய்ததாக கூறி அவர் பழி சுமத்தி துன்புறுத்தி வந்தனர். மனதாலும், உடலாலும் அவர்கள் செய்யும் துன்புறுத்தல்களை பொறுக்க முடியாத ராமலல்லி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குறித்த பெண் தற்கொலை செய்வதற்கு முன்னர் தனது கால், தொடை பகுதியில் நீல நிற பேனையால் தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து எழுதியுள்ளார்.அதைக் கண்ட கணவர் குடும்பத்தார் தங்களின் தில்லுமுல்லு வெளியாகிவிடுமோ என பயந்து ராமலல்லியின் சடலத்தை யாருக்கு தெரியாமல் ஊர் எல்லையில் எரிக்க முயன்றனர்.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் ராமலல்லியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரச ருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் உடலில் எழுதியிருந்த வார்த்தைகளையும் புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில் விரைவில் ராமலல்லி இறப்புக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.