கட்டிய மனைவி தன்னை வீட்டிற்குள் சேர்க்காததால் ஆத்திரம் அடைந்து ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கணவன்..!!
கட்டிய மனைவி தன்னை வீட்டிற்குள் சேர்க்காததால் ஆத்திரம் அடைந்து ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கணவனின் செயல் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொல்கத்தாவைச் சேர்ந்த 40 வயதுடைய மகாபுல் அலி மற்றும் 40 வயதுடைய கொரோசா பேகம் என்ற இந்த தம்பதியினருக்கு 21 வயதுடைய அக்ரம் அலி என்ற மகனும், 13 வயதுடைய மஜி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், திடீரென ஒரு நாள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொரோசா பேகம் மகன் மற்றும் மகளுடன் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். மகாபுல் அலி கதவை தட்டியும் கதவை திறக்கவில்லை .அவரை வீட்டுக்குள் சேர்க்காததால் ஆத்திரம் அடைந்தார்.
இந்நிலையில், திடீரென இவர்களது வீட்டில் அலறல் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று போது அங்கு தீயில் எரிந்து கொண்டிருந்தவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் கொரோசா பேகம் மற்றும் மகன் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகள் மஜி மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து பொலிஸார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மகாபுல் அலிக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், தமபதியினருக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவதினத்தன்று வீட்டிற்கு வந்த கணவரை கொரோசா வீட்டிற்குள் சேர்க்காததால் ஆத்திரம் அடைந்து இரவு நேரம் ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.