டெல்லி விமான நிலையத்தில் இருந்து மகாத்மா காந்தி உருவத்துடன் பறந்த ஏர் இந்தியா விமானம்..!!!
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது காந்தியின் 150 வது பிறந்ததினம் என்பதால் அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார்.“அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர் ஆவர்
வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி நமது இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்த தேசப்பிதா காந்தியின் படத்தினை டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான A320 ரக விமானத்தில் வரையப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் விமானத்தின் வாலின் இருபகுதியிலும் 11 அடி நீளம், 4.9 அடி அகலத்தில் மகாத்மா காந்தியின் உருவம் வரையப்பட்டு அவருக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.