பெற்ற தாயை ஈன இரக்கம் இன்றி சாலையில் வீசி எறிந்த மகன்கள்…!!! உலகத்தில் இப்படியும் பிள்ளைகள் இருக்கிறார்களா???
இந்தியாவில் அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் கம்பர் தெருவை சேர்ந்த 95 வயதுடைய பட்டம்மாள் என்ற மூதாட்டியின் கணவர் உயிரிழந்து விட்ட நிலையில் மகன்களுடன் வசித்து வந்தார். இவருக்கு ஸ்வீட் கடை நடத்தி வரும் சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியரான சதாசிவம் என இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரின் இரண்டு மகள்களும் சரியாக கவனிக்காததால் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்துள்ளார். அங்கு இருந்து மகன்களைப் பார்ப்பதற்காக மீண்டும் வீட்டிற்கு வந்த மூதாட்டி பட்டம்மாளை மகன்கள் இருவரும் துரத்தியுள்ளனர். இதன்பின் மகள் சகுந்தலாவின் வீட்டிற்கு மூதாட்டி பட்டம்மாள் சென்றுள்ளார்.
வயதான தாய் பட்டம்மாள் சில நாட்கள் வைத்திருந்த மகள் சகுந்தலா மீண்டும் சகோதரர் சண்முகத்தின் வீட்டுத் திண்ணையில் கொண்டு போய் விட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகம் மற்றொரு மகனான சதாசிவம் வீட்டு வாசலில் தாய் பட்டம்மாளை கொண்டு போய் விட்டு வந்துள்ளார்.
அதை தொடர்ந்து சதாசிவம் தாய் பட்டம்மாளை சாலையில் வீசிச் சென்று விட்டார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் மூதாட்டியை பட்டம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் பட்டம்மாளின் பிள்ளைகள் மீது பொதுமக்கள் ஜெயங்கொண்டம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.