மஹாத்மா காந்தியின் பூதவுடல் எரிக்கப்பட்ட சாம்பல் திருட்டு..!!!
மஹாத்மா காந்தியின் பூதவுடல் எரித்த பின் அந்த சாம்பல் இந்தியாவின் மத்திய பிரதேசில் உள்ள நூதனசாலை ஒன்றில் இருந்து திருடப்பட்டுள்ளது.
1948 ஆம் ஆண்டு முதல் குறித்த நூதனசாலையில் காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டிருந்தது.
அவரது 150 வது பிறந்ததினத்தின் போது இந்த சாம்பல் திருடப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து அங்கு இருந்த அவரது படங்களில் ‘துரோகி’ என்று எழுதிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் காந்தியின் சாம்பல் திருடப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.