சொத்து தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த மகன்..!!! இந்த கொடூர சம்பவம் எங்க நடந்தது தெரியுமா???
சொத்து தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த மகனின் கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தளி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது குடும்பத்தை பிரிந்து பல வருடங்களாக தனியாக வெளியூரில் வசித்து வந்தார்.
இவரின் தந்தை கோதண்டசாமியுடன் அடிக்கடி சொத்து தகராறு காரணமாக, சக்திவேல் சண்டையிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தந்தை இருக்கும் வீட்டுக்கு சக்திவேல் மதுபோதையில் வந்துள்ளார். அங்கு அவருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சக்திவேல், அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனது தந்தையின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் கோதண்டசாமி நிலைகுலைந்ததைப் பார்த்து, பயத்தில் சக்திவேல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தால் படுகாயம் அடைந்த கோதண்டசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை மீட்டுள்ளனர். அதையடுத்து தலைமறைவாக இருந்த சக்திவேலை, தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.