சென்னையில் இராட்சத திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்ட மீனவர்கள்…!!!
சென்னையில் எண்ணூர் பகுதியில் உயிரிழந்த நிலையில் இ ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலம் கப்பலில் அடிப்பட்டு பாதி உடல் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் அதனை மீட்க முடியாமல் போராடியுள்ளனர்.
கிரேன் மூலம் கட்டி இழுக்க முயன்றதால் அதன் உடல் சிதைவடைந்தது. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடலில் மிதந்த திமிங்கலத்தின் உடலில் கயிறு கட்டி ஜேசிபி வாகனம் மூலம் கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.
பின்னர் கடற்கரையில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு திமிங்கலத்தின் உடல் புதைக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது