காதலன் காதலிக்கிடையில் எற்பட்ட முரண்பாடு…!! காதலன் எடுத்த விபரீத முடிவால் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு..!!
சென்னையை சேர்ந்த கே.வி.விஸ்வநாதனுக்கும் அவருடைய காதலிக்கு முரண்பாடு ஏற்பட்டது. மேலும் இதன் காரணமாக விஸ்வநாதன் குடித்து விட்டு, போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் இவர் குடி போதையில் ஐதராபாத், ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ மற்றும் truejet விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இந்த தகவல் நேற்று இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது . இந்த தகவலால் அனைவரின் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த விமானங்களில் சோதனை செய்த போது வெடிகுண்டு எதுவும் இல்லை இது வெறும் பொய்யான தகவல் என்றும் அவர்கள் உறுதியாக கூறினார்கள்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணையின் போது புரளி மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் ட்ரூஜெட் விமானத்தில் மூலம் சென்னைக்கு பயணம் செய்ய ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த போதே இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அவருக்கும் அவர் காதலிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குடி போதையில் தவறான ஒரு செய்தியை விஸ்வநாதன் கூறினார் என்று பொலிஸ் தெரிவித்தார்