நடிப்போ நடிப்பு உலக மகா நடிப்பு..!! கணவனை தானே கொலை செய்து விட்டு அவர் இயற்கையாகத்தான் இறந்தார் என நாடகமாடிய மனைவி..!!
இந்தியாவில் மதுரையை சேர்ந்த 38 வயதுடைய தென்னரசு மற்றும் 25 வயதுடைய விஜயலட்சுமி ஆகிய இருவரும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடந்த 14ஆம் திகதி தென்னரசு வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்தார்.
இவர் மதுபானத்திற்கு அடைமையானதால் இவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து இவர் இறந்து விட்டார் என அவரது மனைவி விஜயலட்சுமி அனைவரிடமும் கூறியுள்ளார். மேலும் கணவரின் சடலத்தை பார்த்து கதறி கதறி அழுதார். இதனால் விஜயலட்சுமி மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இருந்தாலும் தென்னரசு மரணத்தில் ஏதோ மர்மமாக இருப்பதாக கூறி அவரது பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் தென்னரசுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கையில் தென்னரசு தொண்டை எலும்பு உடைந்து இறந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொலிஸாருக்கு விஜயலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரை விசாரிக்கையில் விஜயலட்சுமி தனது காதலன் சரவணனுடன் சேர்ந்து கட்டிய கணவனை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் பொலிஸார் விசாரிக்கையில் தென்னரசுவிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த சரவணக்குமாருடன், விஜயலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த தென்னரசு மனைவியை கண்டித்தார்.
இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டது. பின்னர் நங்கள் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டம் போட்டோம் எனவும் அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மஞ்சள் காமாலை பாதிப்பால் இறந்ததாக நாடகமாடியுள்ளனர் எனவும் கூறியுள்ளனர். பின்னர் பொலிஸார் இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.