காதலி சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக உயிரை விட்ட காதலன்…!!! இப்படி ஒரு காதலனா???
காதலி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலியின் வீட்டில் முன்பு காதலி கண்முன் காதலன் தீக்குளித்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
சென்னையில் எர்ணாவூரை சேர்ந்த 27 வயதுடைய மொய்தீன் என்பவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எர்ணாவூர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதே தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களது நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மலர்ந்தது.
இந்த காதல் ஜோடிக்கு அவர்கள் சார்ந்த மதத்தின் வடிவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. எத்தனை பிரச்சினை வந்தாலும் அந்த பெண்ணையே திருமணம் செய்வதில் மொய்தீன் உறுதியாக இருந்தார். மதம் கடந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு தடை போட்ட நிலையில், தங்கள் மகள் மொய்தீனை சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, அந்த பெண்ணை வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 20 நாட்களாக அந்த பெண்ணை பார்க்கவும் முடியாமல், செல்போனில் கதைக்க பலமுறை முயற்சித்தும் மொய்தீனால் முடியவில்லை.
அதை தொடர்ந்து காதலன் மொய்தீன் கையில் மண்ணென்னை பாட்டிலுடன் காதலியின் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டிற்குள் காதலியை வெளியே கூப்பிட்ட நிலையில் காதலி வெளியே வந்தாள். அப்போது நீ ஏன் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாய் என கேட்டு வாக்குவாதம் செய்தார். காதலி என்னை மறந்து விடுமாறு கூறி விட்டு வீட்டுக்குள் சென்று விட அவரது குடும்பத்தினரும் மொய்தீனை எங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
காதலி சொன்ன வார்த்தையை கேட்ட அதிர்ச்சி அடைந்த காதலன், காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் மன அழுத்தத்தால் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடலில் தீயுடன் வீதியில் ஓடிய அவரைக் காப்பாற்ற வீட்டில் இருந்து ஓடி வந்த காதலிக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மொய்தீன் உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்த்தனர். பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மொய்தீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலைக்கு செல்லாமல் நாடக காதல் வலை வீசி பெண்களை ஏமாற்றிச் செல்லும் சில ஊதாரி இளைஞர்கள் மத்தியில் பொறுப்பான வேலை இருந்தும் காதலித்த பெண் கிடைக்காத மனவேதனையில் உயிரை மாய்த்துக் கொண்ட இந்த இளைஞர் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. .