மூன்றாவது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான இருபது-20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
நியூசிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகளைக் கொண்ட இருபது-20 தொடரில் பங்கேற்று வருகின்றது.
இதில், ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றது.
இந்நிலையில், மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ரோகித் சர்மாவின் அரைச்சதமும் (65) ஏனைய வீரர்களின் பொறுப்பான ஆட்டமும் கைகொடுக்க, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களைச் சேர்த்தது.
பின்னர் 180 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நோக்கிக் களமிறங்கிய நியூசிலாந்து அணி, கப்திலின் (95) அதிரடி கைகொடுக்க 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களைச் சேர்த்தது.
இதனால், ஆட்டம் சமநிலையடைந்தது.
இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது.
இந்தியா 20 ஓட்டங்களைச் சேர்க்க, நியூசிலாந்துி 17 ஓட்டங்களையே சேர்த்தது.
இதனால், இந்திய அணி வெற்றிபெற்று, 5 போட்டிகளைக் கொண்ட இருபது-20 தொடரை 3:0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது.
ஆட்டநாயகனாக இந்தியாவின் ரோகித் சர்மா தெரிவானார்.
இரு அணிகளும் மோதும் நான்காவது ஆட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது.