இரண்டாவது ஆட்டத்தில் இலங்கையை வென்றது இந்தியா!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபது-20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக் கொண்ட இருபது-20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
முதலாவது ஆட்டம் மழை காரணமாகத் தடைப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது ஆட்டம் இன்று இரவு நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்களைச் சேர்த்தது.
அந்த அணி சார்பாக ஆகக்கூடுதலாக குசல் பெரோ 34 ஓட்டங்களைச் சேர்த்தார்.
பின்னர் 143 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி, 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களைச் சேர்த்து, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில், ராகுல் (45), தவான் (32), ஐயர் (34) ஆகியோர் சிறப்பாக ஆடி ஆட்டமிழந்தனர். கோலி 30 ஓட்டங்களுடனும் ரிஷாப் பாண்ட் ஓர் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி, 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுளளது.