இந்தியன் 2 படபிடிப்பு தளத்தில் மூவரின் மரணத்திற்கு காரணம் இவர் தான். ! சங்கர் மற்றும் கமலஹாசனுக்கு பொலீஸில் ஆஜராகுமாறு சம்மன்..!!
நேற்றைக்கு முன் தினம் இந்தியன் 2 திரைப்பட சூட்டிங் தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3பேர் பலியானதுடன் 10 பேர் வரை காயமடைந்தனர். இந்த நிலையில் இந்த மரணம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு கமலஹாசன் மற்றும் சங்கருக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாக கூறப் பட்டுள்ள அதே நேரம் ஷங்கரின் மேனஜேர் விமலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது தொடர்பாக காயப் பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையிலேயே விமல் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிய வருவதாகவது பாரமானவற்றை மேலே வைத்து சூட் செய்யும். போது பாரம் குறைவதற்காக சில முறைகள் கையாளப் படுவது வழக்கம்.அதாவது படப்பிடிப்பில் Iron truss என்ற சாதனத்தை பயன்படுத்தி பிரமாண்ட லைட்ஸுகளை மேலே வைப்பார்கள்.
ஆனால் நேற்றைக்கு தினம் சாதாரண முறையிலே பக அடி உயரத்தில் பாரம் இருந்துள்ளது. இது தொடர்பாக விமல் வீணாக இதற்கெல்லாம் பணம் செலவு செய்தால் சரி வராது..எனவே சாதாரண முறையில் கிரென் செயற்படட்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே கிரென் அறுந்துள்ளது.
பல கோடி ரூபாய் செலவு செய்து திரைப்படம் எடுக்கும் போது சில ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து மனிதர்களின் உயிரை பாதுகாக்க முடியாதா என்ன..? இதனால் தான் விமல் மீதுவழக்கு தொடரப் பட்டுள்ளது. மூவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த விமலை கைது செய்து விசாரணை நடத்துமாறு திரைதுறையினல் கேட்டுக் கொண்டுள்ளனர்..!!