இடைவிடாமல் இருமல் உயிர் போகிறதா.;? இதோ நொடியில் குணப் படுத்தும் பாட்டி மருத்துவம்..!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொல்லை கொடுப்பது இருமல் தான். இருமலுக்கு பெரும்பாலும் ஆங்கில மருத்துவங்கள் சிறந்த பயனை கொடுப்பதில்லை. அதே நேரம் இருமல் இரவில் வந்துவிட்டால் வைத்தியசாலை செல்வதும் கடினம். சிலருக்கு இருமல் வந்தால் மூச்சுவிட முடியாதபடி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
இதற்கான தீர்வை தான் பார்க்கப் போகின்றோம். திடீரென இரவில் தொடர் இருமல் வந்தால் வீட்டில் பச்சை மஞ்சள் இருக்கிறதா பாருங்கள். பெரும்பாலான வீடுகளில் மஞ்சள் வளர்ப்பார்கள், இல்லாவிட்டால் வீட்டு தேவைக்காக வாங்கி வைத்திருப்பார்கள். பச்சை மஞ்சளை எடுத்து சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
அதன் பின் சிறிய உரலில் அல்லது டம்ளர் ஒன்றில் போட்டு நன்றாக தட்டி அதன் சாறு ஒரு கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் தேன் ஒரு கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து உடனடியாக குடியுங்கள். இப்படி செய்தால் இரவில் வரும் தொடர் இருமல் உடனடியாக நின்று விடும்.
உடனடியாக மஞ்சள் கிடைக்காதவர்கள் இஞ்சியை தட்டி அதன் சாறு ஒரு கரண்டி எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். அப்படி குடித்தாலும் இரவு நேர இருமல் உடனே நின்று விடும்..!!