ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வின் போது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்..!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!!
ஆப்கானிஸ்தானில் நங்கஹார் மாகாணத்தின் பஞ்சிரகம் மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற திருமண நிகழ்வில் போது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் ஐந்து பேர் பலியானதுடன், 40 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் அரச சார்பான ஆயுத குழுவொன்றின் தளபதியை குறி வைத்தே இடம்பெற்றது.இந்த நிகழ்வின் போது பயங்கரவாதிகள் சிறுவர் ஒருவரை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் தமக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தாலிபான்கள் கூறியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பல தாக்குதல்களை கடந்த மாதங்களில் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக காபூல் கல்வி நிலையத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் அதிக அளவில் பொதுமக்கள் கொல்லப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆப்கானிஸ்தானிய அரச பிரதிநிதிகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்ற நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சமாதான பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பினரும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.